November 03, 2009

எஞ்ஞினியா வா!!!!

16 பின்னூக்கங்கள்

இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு..? மற்றும் நல்ல இஞ்ஞினியராக என்ன செய்வது..??

இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு என்று ஒரே ஒரு இன்ஞி. பற்றி எழுதப்போவதல்ல.. எல்லாரும் கல்யாணம் பண்ணி.. ரெசஷன்ல வேலைக்கு போயின்னு மொக்கையும் இல்ல... ”இஞ்ஞினியர்கள்” -- இந்த துறைக்கு ஏன் இத்தனை மவுசு..?? எப்பிடி வந்தது இந்த பவுசு..?? ஆழத்தைத் தேடி..

தமிழ்நாட்டின் ஏதோ ஒர் தெருவுல போய் நின்னு... “யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்..

உங்க வீட்டு புள்ளையும் படிக்கும்..ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி உங்க கண்ணு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்து புள்ளைகளும் படிக்கும்...

இவ்வளவு ஏன்.?? நீங்கள் இந்தியாவில் வசிக்கும் தமிழர் என்றால்.. உங்கள் ரத்த பந்தமோ.. நெருங்கிய சொந்தமோ.. இல்லாவிட்டால்.. ஏதாவது தெரிந்த வீட்டு பிள்ளையோ.. கண்டிப்பாக இன்ஞினியரிங் படித்துக் கொண்டிருக்கும்..

இல்லையென்றால்.. உங்களால் எந்த ”இஞ்ஞினிய” முகத்தையும் மேற்கூறிய எந்த வரிகளுடனும் தொடர்பு படுத்த முடியவில்லையென்றால்.. நீங்கள் இந்த இடுகையை படிக்காமல் இருப்பது நலம்...

சரி நாம ஃப்லோவ தொடருவோம்...

1982 க்கு முன்னாடி இஞ்ஞினியர் துறையும் டாக்டர் துறை போலத்தான் இருந்ததாம்.. ஏதோ “ரொம்ப” படிச்ச புள்ளைங்க அவங்களுக்குள்ள சண்ட போட்டு இருக்குற 500--1000 சீட்ட புடிச்சுக்குங்க... அவ்ளோதான்..

ரொம்ப கெத்தா இருந்த துறையாம்.. அதுக்கப்புறம் மவராசன் “எம்.ஜி.ஆர்.” தனியார் கல்லுரிகளுக்கு அனுமதி தந்தாராம்.. (இப்போ தெரியுதா ஏன் தலைவர் படம்ன்னு...) அதுக்கும் பெரிய அளவுள டெல்லில லாபி நடந்ததுன்னு நான் இண்டர்வியூ போனப்ப ஒரு மவராசன் சொன்னப்ல... ஆச்சா.. அதுக்கப்புறம் புற்றீசல் போல காலேஜ் ஆரம்பிக்கப் படவில்லை..

ஆனா இது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக தெரிந்ததும்.. சும்மா எல்லா பண முதலை திமிங்கலம் சுறா எல்லாம் இறங்கிடுச்சு... இப்போ இருக்குற நெலமை உடனே வந்துடல.. நாங்களாம் நாய் பாடுபட்டு வேலை தேடுரதுக்கு .. நம்ம அண்ணனங்கெல்லாம் அமெரிக்கால சம்பாதிக்க.. அமெரிக்கால இருந்து ஒருத்தர இந்தியா தொரத்துரதுக்கும்.. இங்க அம்ஜிகரையில ஏதோ ஒரு கம்பெனி காசு புடுங்கி ஏமாத்துறாதுக்கும் தசாவதாரம் கேயாஸ் தியரி மாதிரி ஒரு பட்டம் பூச்சியின் படபடப்பின் தொடர்பு இருக்கு (கன்சல்டன்ஸி என்னும் போலிகள பத்தி வேற சொல்லனும்ங்க.. ஹையோ வேல ஜாஸ்தி ஆகுதே...)

ரொம்ப லென்த்தா போகுதுல்ல.. சரி தொடராக்கிடுவோம்..

“எஞ்ஞினியா வா!!!” பேர் எப்பிடி இருக்கு ?? எத பத்தி எழுத போறேன்னு தெரியுதுல்ல.. நீங்களே ஒரு நல்ல தலைப்பா பின்னூட்டுங்க..

(***இது நான் செவிவழியாக கேட்ட தகவல்களை அச்சேற்றும் முயற்சி.. தவறிருந்தால்.. நான் ஏதையாவது சொல்லாமல் விட்டிருந்தால் நீங்க சொல்லுங்க ..***)

November 01, 2009

உன்னைப் போல் ஒருவன்

20 பின்னூக்கங்கள்


”உன்னைப் போல் ஒருவனை “ இரண்டு மாதம் கழித்து போஸ்ட் மார்ட்டம் செய்யும் பதிவல்ல இது..

கிட்டத்தட்ட நான்கு மாதம் கழித்து எழுதுகிறேன்...

ஒன்னுமே தெரியாம பதிவுலகுல வந்து.. கொஞ்சமே கொஞ்சமா சேர்த்தாலும் கெத்தா சில நண்பர்கள் சேர்த்து.. யாருமே படிக்கமாட்றாங்களேன்னு வருந்தி. சூர்யா கதைய எழுதி ரொம்ப கொஞ்சமா (என்ன தமிழ்..)சில நண்பர்கள் பிடிச்சு.. பதிவுலக மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டு.. யப்பா யப்பா... நெனச்சா ஒரு சினிமா பாடல் போன்ற உணர்வு... :-)

இஞ்ஞினியரிங் காலேஜ் மாணவனாக குப்பை கொட்டிக் கொண்டிருந்த நான்.. படித்து முடித்தது இந்த மே--யில்தான்... 3 மாசம்.. தெனற தெனற வேல தேடி.. கடைசில.. வேல கெடச்சது .. 3i-info tech என்னும் கம்பெனியில... மவனே software எழுதி கலக்க போறோம்டான்னு பாத்தா... என்னுடைய client office "MADRAS HIGH COURT" (சென்னை உயர் நீதி மன்றம்...) (வேலைய பத்தி .. இன்டர்வியூ போன கதைகள அப்புறம் பாப்போம்... எழுதலாமா வேணாமான்னு சொல்லுங்க..)

இப்போ ஆண்டவனோட அருளால வேலைக்கி போய்கிட்டு இருக்கேங்க.. ரெண்டரை மாசமா...

வேல தேடும் போது.. நம்ம தமிழ் நெஞ்சம் அண்ணன்கிட்ட.. சக்கர அண்ணங்கிட்டலாம் சொல்லி வெச்சிருந்தேன்...வேல தேடும் போது வேற எதும் கண்ணுல தெரியல.. காலேஜ் பையனா எத பத்தி கவலையும் இல்லாதப்ப இருந்த கற்பனை ஊற்று.. இந்தக் காலகட்டத்துல வத்திப்போச்சு.. என்னால புதுசா பதிவெல்லாம் எழுத முடியல..

வேலை கெடச்ச அப்புறமும்.. தமிழ் பதிவுலகம் என்னை சில சமயம் தேடும்.. என்னை மெயிலில் தொடர்பு கொண்ட அன்பர்களுக்கு நன்றி.. கடையாக சூர்யா கதைக்கு பின்னூட்டம் போட்ட நண்பருக்கும் இன்ன பிற உள்ளங்களுக்கும் நன்றி...

மாணவனாக இருந்த போது இருந்த வெறி இப்ப இல்ல.. அட என்னப்பா.. 5 மாசத்துக்குள்ள ரொம்ப ஸீன் போட்றன்னு கேட்டா நீங்க பெருசு... இந்த transition பத்தி நம்ம டாக்டர் சுரேஷ் தல விரிவா ஒரு பதிவு எனக்கும் டெடிக்கேட் பண்ணி போடுங்க...

எழுதனும்னு உணர்வு ஒரு மாசமா தோணுனாலும்.. என்ன எழுதறுதுன்னு தோணல... விமர்சனம் எழுதலாம்னு நெனச்சா. .. அவனவன் படம் ரிலிஸாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடியே கலக்குறாய்ங்க.. சரி நடக்கட்டும்ன்னு வெயிட் பண்ணேன்...

பதிவுலகிலும் நிறைய மாற்றம்.. தொழில்நுட்ப ரீதியாக நிறய சந்தேகங்களை இந்த புது உலகம் எனக்கு தீர்த்தது.. ஒரு படம் ரிலீஸானால் அத பாக்குறதா வேணாமான்னு முடிவு பண்ண உதவியது..

நாமெல்லாம் ஏண்டா எழுதறோம்னு தோணவெச்ச பதிவுகள் நிறைய... நான் பின்னூட்டம் இடாம என்னால முடிஞ்ச அளவு எல்லாத்தையும் படித்துக் கொண்டு தான் இருந்தேன்...

அடுத்து ஏதாவது தோணும் போது எழுதுவோம்... (இதுவரை நடந்த சில முக்கியமான நிகழ்வுகளாஇ என் சக பதிவர்கள் யராவது பின்னூட்டமோ அல்லது பதிவோ போட்டு சொல்லவும்...)

என் ப்ளாக்கின் caption மாதிரி.. “யாருமே இல்லாத யாருக்கு நான் இப்ப டீ ஆத்துறேன்???

July 13, 2009

எந்திரனில் கலக்கப் போகும் சந்தானம்.

16 பின்னூக்கங்கள்

இது வாமனன் படத்துக்கு நான் எழுதுற லாப நஷ்ட கணக்குங்க,,,

வாமனன்.. தயவு செஞ்சு யாரும் இந்தக் கருமம் புடிச்ச படத்த “வெள்ளிப் பரிசிலோ” இல்லாட்டி.. “இந்தியத் தொலைக்காட்சிகளிலோ” போட்டாக் கூடபாக்காதீங்க..

வேணா.. அவ்ளோதான்.. பழைய படங்களின் கதை மாதிரி இருக்குன்னு சொல்ல விரும்பல.. கதையாய் சொல்லும் போது நல்லா இருக்கும் விஷயத்த திரையில் அதே அளவு தாக்கத்துடன் சொல்வதற்க்கு ஒரு தனித்திறமை வேண்டும்... டைரக்டர் அகமது ஸார்... பாடம் கத்துக்கிட்டீங்க... அடுத்த முற நல்லா பண்ண வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் காஸ்ட்லியான பாடம்,,)

எனக்கு இந்தப் படம் பாக்கும் போது கண்ணு முன்னாடி வந்தது டைரக்டரோட நெலமதான்.. மொத [படம்.. பாவம் .. இன்னும் ப்ளான் பண்ணி மெனக்கெட்டு எடுத்துறுக்கலாம்,,

சந்தானம்தான் முழு படமும் பாக்க வைக்கிறதுக்கு உதவுறாரு.. ஹீரோயின்ஸ் பத்தி கேக்காதீங்க,,, மொக்க.. நீயா நானா கோபிநாத் ஏண்டா நைனா நடிச்சன்னு கேக்குற மாதிரி அப்பப்போ வந்துட்டு போறாரு...

இந்தப் படத்துலயே சந்தானம் இந்தக் கலக்கு கலக்குறாரே... டைரக்டர் ஷங்கரோட மேஜிக்கோட இவரோட டைமிங்கும் சேந்தா,,, கலக்க வாழ்த்துக்கள் சந்தானம்..

டிஸ்கி

இந்தப் பக்கமே வரமுடியல கொஞ்ச நாளா.. என்னைத் தேடி வந்து ஏண்டா எழுதலன்னு இங்க கேட்ட |தல| டாக்டருக்கும்,,, மெயிலில் வந்த பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. இனிமே அப்பப்போ வந்துட்டு போறேன்...

அன்பிற்க்கு நன்றி..
 

கடைக்குட்டியின் வலைஎழுத்து Copyright © 2008 Black Brown Art Template by Ipiet's Blogger Template